Tuesday, December 31
Tuesday, December 10
மானுடம் மாயம்! காதல் அமரம்!!..
கடந்த மாத இறுதியில் என் முகப்புத்தகத்தில் பகிர்ந்த ஒரு பதிவு இது!
சரி! எங்க இருந்து ஆராம்பிக்குறது? எவ்வளவோ எழுதணும் போல இருக்குது!
(எழுத்து மூலம் இதை பதிவு செய்து எந்த பிரயோஜனமும் இல்லை என்றாலும், ஏதோ என்னளவில் என்னை சுற்றி இருப்பவர்களின் உணர்வினை கொஞ்சம் பதிவுசெய்ய வேண்டும் போல தோன்றியது. யாருடைய மனதையும் புண்படுத்த எனக்கு நோக்கமில்லை..!)
..........
Wednesday, November 27
Tuesday, November 19
One நிமிட் for 5 மினிட்ஸ் 19-11-2013
பதிவு எழுதி மூன்று வாரமாகிறது. தொடர் மனச்சோர்வு ஒரு காரணம். அதை தவிர எழுதும் நோக்கம் எழும் போதெல்லாம் என் எழுத்தை நானே விமர்சித்து முடக்கி விடுவது மற்றொரு பெரிய காரணம். இருந்த போதிலும் பிறர் எழுதியதை வாசிப்பதும், யோசிப்பதும் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது.
இப்போ எல்லாம் அடிக்கடி இல்லைனா பலசமயங்களில்.. அதுவும் இல்லைனா நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனச்சோர்வு அடைவதும், எதை குறித்தும் ஆர்வம் இல்லாமல் அமைதியா இருப்பதும், மீண்டும் ஏதோ ஒரு தற்செயல் நிகழ்வில் விழித்தெழுவதுமாக, ஒரு சராசரி மிடில் கிளாஸ் மனசாட்சி உடையவங்க எப்பிடி இருப்பாங்களோ அப்படித்தான் நானும்.
டிப்ரசன்.. சப்ரசன்.. அப்ரசன்..!!
--#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#-- --*--*--*--*--*-- --#---#--#--#--#--
Monday, October 28
Tuesday, October 22
Sunday, October 20
எனை என்ன செய்தாய்..
தொடர்ந்து என்னை வாசித்து வருபவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! புதியவருக்கு இந்த பதிவு உங்களுக்கு சலிப்பை தரக்கூடும். இடது பக்கம் "மேகம் தொட்டவை" பகுதியில் உள்ளதை வாசித்து விட்டு வாருங்கள்.
தமிழ் பதிவுலகம் ரொம்ப பெரியது. நான் எங்கேயோ ஒரு மூலையில இருக்கேன். பிரபலங்களின் பதிவுகளை வாசிக்கும் பலருக்கு என் எழுத்தெல்லாம் ஒன்னுமே கிடையாது. ஆனாலும் என்னையும் வளர்த்து விடும் உங்களின் நல்லெண்ணம் தான் இந்த மாதிரி எல்லாம் பேசவைக்குது.
கொஞ்சம் எமோசனல் ஆசாமி தான் நான். எனக்கும் உங்களுக்குமான இந்த இணையத்தொடர்பு வளரணும்னு நிறைய கனவுகளோடு.., தொடர்ந்து வாசிங்க.. பின்னூட்டத்தில கருத்துக்களை சொல்லுங்க.. பிடிச்சுருந்தா ஷேர் பண்ணுங்க...'ன்னு வழக்கமான டெம்ப்ளேட் வார்த்தைகளை சொல்லி இரண்டாவது வருடத்திக்குள் அடி எடுத்து வைக்கும் ஆறாவது சக்கரத்தின், எழுத்துக்களை நேசிக்கும் உங்களை நன்றி சொல்லி என் கடன் தீர்க்க முடியாமல், வார்த்தைகளை தேடி விரைகிறேன்....
Wednesday, October 16
Friday, October 11
வாக்குப்பதிவும்.. இசைஞானி கவிதையும்..
ஆறாவது சக்கரம் பதிவுலகம் ஏறி ஒரு வருடம் பூர்த்தியாகப்போகிறது.. இந்த ஒருவருடம் முழுதும் நீங்களும் என்னோடு இருந்ததை நினைத்து, நன்றியோடு ஒரு பதிவை எழுதத் தயாராகிக் கொண்டு இருக்கிறேன். உங்கள் நேரத்தில் இடம் ஒதுக்கி, என் எழுத்துக்களை படிக்க வந்து போனவர்களின் கண்களையும் ஏதோ ஒரு வகையில் என் பதிவுகள் குளிர்வித்திருக்கும் என நம்புகிறேன். இந்த வாக்குப்பதிவு ஒரு சுய விளம்பரம் மட்டுமே.
யாராரோ எதுக்கெல்லாமோ விளம்பரம் தேடுறாங்க நான் எனக்கான கனவுகளை நீட்டிக்கொள்ள விளம்பரம் தேடுகிறேன். ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்கள் இருக்கக் கூடும் என்பதால், தரவுகளில் உங்கள் தெரிவினை "டிக்" செய்து வாக்கு பதியலாம். நன்றி.
யாராரோ எதுக்கெல்லாமோ விளம்பரம் தேடுறாங்க நான் எனக்கான கனவுகளை நீட்டிக்கொள்ள விளம்பரம் தேடுகிறேன். ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்கள் இருக்கக் கூடும் என்பதால், தரவுகளில் உங்கள் தெரிவினை "டிக்" செய்து வாக்கு பதியலாம். நன்றி.
~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~*~~~~~~~~~~~
Saturday, October 5
தோழியரிஸம்_updates - september 2013
அழகியலின் வர்ணங்களை புரிதலின் யதார்த்தங்களோடு இழைத்து இழைத்து நெய்யப்பட்ட உறவுதான் நட்பு. அதை எந்த வரம்பும் தாண்டாமல் இறுதிவரையும் புனிதம் காக்கும் ஒரு ஆணும் பெண்ணும் கடவுளுக்கு நிகர் ஆனவர்கள்.
எல்லோருக்கும்
கிடைத்து விடாது இப்படி ஒரு உறவு! அள்ளி அள்ளி பூசிக்கொள்ளும் அளவுக்கு
மலை போல குவிந்து கிடக்கிறது இந்த அழகான உறவின் நினைவுகள். நிகழ்காலத்தின்
அழகான தருணங்களில் கடந்தகாலத்தின் வரங்களை எடுத்துவருகிறது இந்த உறவு. அதை எதிர்காலத்துக்காய் பதிவு செய்யும் முயற்சி தான் அடியேனின் இந்த "தோழியரிஸம்_updates!"
Friday, September 27
Tuesday, September 24
சஹானா - ஒரு சாதாரண கதை
அந்த நேரத்துல யாரா இருந்தாலும் அப்படித்தான் முடிவு எடுத்திருப்பாங்க. கண்டிப்பா நான் செய்தது சரி தான் ராகுல். உன் அட்வைஸ் கேட்டுக்கணும்னு எனக்கு எந்த தேவையும் இல்லை. உன் அக்கறைக்கு ரொம்ப நன்றி. தயவு செய்து போனை வை. நான் பிறகு பேசுறேன். குட் பை ராகுல்.
-சடார் என்று போனை வைத்து விட்டு தனது அறைக்கு திரும்பினாள் சஹானா.
மறுமுனையில் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த ராகுல் உடனே சஹானாவின் கைபேசிக்கு அழைத்தான். அழைப்பை துண்டித்தாள். மீண்டும் அழைத்தான். மீண்டும் துண்டித்தாள். பொறுமை இழந்த ராகுல் நேரே அவளை பார்க்க அவள் வீட்டுக்கு கிளம்பினான்.
-சடார் என்று போனை வைத்து விட்டு தனது அறைக்கு திரும்பினாள் சஹானா.
மறுமுனையில் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த ராகுல் உடனே சஹானாவின் கைபேசிக்கு அழைத்தான். அழைப்பை துண்டித்தாள். மீண்டும் அழைத்தான். மீண்டும் துண்டித்தாள். பொறுமை இழந்த ராகுல் நேரே அவளை பார்க்க அவள் வீட்டுக்கு கிளம்பினான்.
Wednesday, September 18
One நிமிட் for 5 மினிட்ஸ் (18-09-2013)
நண்பர் பிரசாத் ஹரி பற்றி பல சந்தர்பத்தில் நான் என் பதிவுகளில் குறிப்பிட்டதுண்டு.
கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருப்பவருக்கு புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இற்றைக்கு ஏறக்குறைய 4 ஆண்டுகள் முன்னதாக தான் வந்தது. அவரது இந்த ஆர்வத்திற்கு காரணமானவர் பஹீரதன் என்கிற மூத்த புகைப்பட கலைஞர் (இப்பிடி சொன்னது தெரிஞ்சால் அந்த நண்பர் என்னை வலை வீசி தேடக்கூடும்). அவர் தன் காதல் மனைவியோடு தற்சமயம்.. இலக்கம் ஆறு, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோட்டில் தனிக்குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறார்.
தனது திறைமைக்கு ஏற்றதைப்போல தற்பொழுது நண்பர் ஹரி, குருநாதரிடம் கற்றுக்கொண்ட வித்தையை பயன்படுத்தி தன் விருப்பத்திற்கு சுட்டுத்தள்ளி பின்பு ஆறவைத்து அவரது பிரத்தியேக, Canonனும் நானும் என்கிற facebook பக்கத்தில் தருகிறார்.
கடந்து செல்லும் நிமிடங்களை நான் என் கவிதைகளால் எழுத்து வடிவமாக தருவதை போல, இவர் நிழற்படமாக தருகிறார். இதோ அவரது.. வானம் மறந்த சில சிறகுகள்!
கடந்து செல்லும் நிமிடங்களை நான் என் கவிதைகளால் எழுத்து வடிவமாக தருவதை போல, இவர் நிழற்படமாக தருகிறார். இதோ அவரது.. வானம் மறந்த சில சிறகுகள்!
Thursday, September 12
தம்மாதுண்டு வாழ்க்கை! தாறுமாறா கனவு! தொடர் - 2
சடார்ன்னு ஒரு பிளாஷ் பேக்..
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கொழும்பில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். என் அக்காவின் சக வயது தோழி, சமந்தி அக்கா. நாங்க இருந்த வீட்டு பக்கம் தான் இருந்தாங்க. அவங்க வீட்டுல இருந்து என் அக்கா கொண்டு வந்த கவிதை புத்தகம் ரொம்ப நாளாக வீட்டில் இருந்தது. அந்த புத்தகத்தின் அட்டையில் இருந்த பெயர் என்னை ஈர்க்க எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
மு.மேத்தா. நான் வாசித்த முதல் கவிஞர். புத்தகத்தில் முதல் சில பக்கங்களை திறந்ததுமே மனச் சிறகு முளைக்க ஆரம்பித்தது எனக்கு. கவிதையில் இருக்கிற இலகுவான வர்ணனைகளை, வார்த்தை ஜாலங்களை எல்லாம் ரசிக்க தொடங்கியிருந்தேன். கவிதை எழுதும் ஆர்வமும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. கவிதை எழுதும் பழக்கம் என் பதின்ம பருவத்தில் ஆரம்பித்தது.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கொழும்பில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். என் அக்காவின் சக வயது தோழி, சமந்தி அக்கா. நாங்க இருந்த வீட்டு பக்கம் தான் இருந்தாங்க. அவங்க வீட்டுல இருந்து என் அக்கா கொண்டு வந்த கவிதை புத்தகம் ரொம்ப நாளாக வீட்டில் இருந்தது. அந்த புத்தகத்தின் அட்டையில் இருந்த பெயர் என்னை ஈர்க்க எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
மு.மேத்தா. நான் வாசித்த முதல் கவிஞர். புத்தகத்தில் முதல் சில பக்கங்களை திறந்ததுமே மனச் சிறகு முளைக்க ஆரம்பித்தது எனக்கு. கவிதையில் இருக்கிற இலகுவான வர்ணனைகளை, வார்த்தை ஜாலங்களை எல்லாம் ரசிக்க தொடங்கியிருந்தேன். கவிதை எழுதும் ஆர்வமும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. கவிதை எழுதும் பழக்கம் என் பதின்ம பருவத்தில் ஆரம்பித்தது.
Wednesday, August 28
Tuesday, August 27
ராஜாத்தி ராஜா
நானும் அவளும் இசைஞானியின் தீவிரமான ரசிகர்கள்.
இருவருமே இணைந்து, ஒன்றாக அமர்ந்து பாடல் ரசிப்பதும், இளையராஜாவின் இசையை நினைத்து உருகுவதும், அந்த பாடல்களின் சிறப்பை பற்றியெல்லாம் பேசித்தீர்ப்பதிலும் பல நாளிகைகள் கழிந்ததுண்டு.
எல்லாவற்றிலும் அதிகமாக நான் அவளை நேசித்திருக்கிறேன். அவளது 36 வயதில் அவள் இறந்துவிட்டால்.இன்று சட்டென யூ-டியூப்'பில் இந்தப்பாடலை பார்க்க நேர்ந்த போது, நான் என்னை கட்டுப்படுத்தமுடியாமல் அழுதுவிட்டேன். ராஜா சாருடைய இசை என் ஞாபகங்களை எப்போதுமே உயிர்ப்போடு வைத்திருக்கிறது. இன்றும் என் மனைவி என் அருகிலேயே இருப்பதை உணர்கிறேன். நான் கேட்ட இந்த பாடல் இளையராஜாவின் பாடல்களிலேயே மிகவும் சிறந்தது. இந்த பாடலுக்கு வேறெந்த பாடலும் இணை இல்லை!
-----------------------------------------------------------------------------------------------------------------------
Wednesday, August 21
One நிமிட் for 5 மினிட்ஸ் (21-08-2013)
கவிஞர் வாலி பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தங்களை ரசிக்கவைத்த வரிகளை நண்பர்கள் சொல்லிக்கொண்டே வந்தார்கள். எல்லோருடைய ரசனைகளுமே வித்தியாசமாக இருந்தது. மீண்டும் மீண்டும் நேரம் போவதே தெரியாமல் பாடல்களை பற்றியும் அதிலே வரும் வரிகளை பற்றியும் சொல்லிக்கொண்டே இருந்தோம்.
நினைவிலிருந்த ஒரு பாடலின் வரியை சொல்லி இதில் வாலியின் திறமையில் நான் மயங்கி கிடக்கிறேன் என்று சொல்ல.. அதை எல்லோரும் ரசிக்க.. பாடலின் அடுத்தவரிகளை தேடி நான் கூகுளிட, இறுதியில் அவ்வரிகளின் சொந்தக்காரர் வேறோருவரானர்.
வரி இது தான்..
நினைவிலிருந்த ஒரு பாடலின் வரியை சொல்லி இதில் வாலியின் திறமையில் நான் மயங்கி கிடக்கிறேன் என்று சொல்ல.. அதை எல்லோரும் ரசிக்க.. பாடலின் அடுத்தவரிகளை தேடி நான் கூகுளிட, இறுதியில் அவ்வரிகளின் சொந்தக்காரர் வேறோருவரானர்.
வரி இது தான்..
Sunday, August 18
ட்லேக்சா ட்ஹா -பிளாஷ் பெக்
காட்சி- 06
200ஆவது
லைக் நீதான் போட்டுருக்குற. நான் எழுதும்போது கண்டிப்பா 20லைக்ஸ் ஆச்சும்
கிடைக்கும்னு நினைச்சேன். இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன். உனக்கு தேங்க்ஸ்
சொல்ல கூடாது. இருந்தாலும் தேங்க்ஸ்.
நான் சொன்னதை கேட்டுவிட்டு தோழி இப்படி சொன்னாள்.
அந்த ஸ்வேதா பத்தி வாசிக்கும் போது எனக்கு என்னை தான் தெரிஞ்சுது, என்னை தான் பார்த்தேன்.. குரங்கு குட்டி போல நானும் இப்பிடி தான் அடிடா புடிடா'ன்னு கோவிச்சுட்டு போவேன். பிறகு உய்ய்ய்ய்ய்'ன்னு அழுவேன்.
Thursday, August 15
ஹாட் சாக்லேட்
"சுவீ.. ஐ அம் இன்! நீ எங்க..?"
-சொன்ன இடத்துக்கு சரியா இருபது நிமிசம் தாமதமா வந்து சேர்ந்தாரு நம்ம ஹீரோ ஜீவா.
போனில் இடம் கேட்டுக்கொண்டான்.
போனில் இடம் கேட்டுக்கொண்டான்.
"கேஷியர் பக்கத்துல லெப்ட்டு திரும்பி நேரா உள்ள வா.. நாலாவது டேபிள்."
-இது நம்ம ஹீரோயின். ஸ்வேதா. செல்லமா சுவீ.
இவங்களோட கடைசி சந்திப்பு இது. ரொம்பகாலமா லவ்வா தான் இருந்தாங்க. கடைசியில எல்லாருக்கும் மாதிரி இவங்களுக்கும் ஒரு அர்த்தமில்லாத இடைவெளி. எவ்வளவோ தடவை ஓட்ட வைக்கலாம்னு பார்த்தாங்க. ஆனால் முடியல. ஒரு நாள் போன்ல ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்க. நிரந்தரமா பிரியுறதுன்னு. சிட்டில எல்லாத்துக்குமே பார்ட்டி தான். இன்னைக்கு நம்ம ஹீரோ ஹீரோயினோட பிரேக் அப் பார்ட்டி. ஒரு காபி டே ரெஸ்டாரன்ட். சாயங்கால நேரம்.Wednesday, August 14
Monday, August 12
தம்மாதுண்டு வாழ்க்கை! தாறுமாறா கனவு! ☺
நானெல்லாம் பேசாம இருக்குறது ரொம்ப கஷ்டம். வளவளன்னு ஏதாச்சும் பேசிக்கிட்டே இருப்பேன். அப்பிடியும் இல்லேன்னா இதை மாதிரி ஏதாச்சும் எழுதி கிறுக்கிட்டாவது இருக்கணும். அதுவும் எழுதுறதுக்கு ஒரு தனி மூட் வேணும். சும்மா நினைச்ச நேரம் எல்லாம் எழுதவும் வராது. இந்த சில நாட்களா ஒரு பக்கம் வேலை முடிஞ்சு வந்தால் சாப்பிட்டு தூங்கிடுறது ஒரு வழக்கமாகிப்போச்சு. தனிமை என்பதையும் அதன் தாக்கம் பற்றியும் என் வலைப்பூவிலேயே நிறைய பதிவுகள் எழுதிட்டேன். சம்பாதிக்குறதும், அதை செலவு பண்ணுறதும் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு! மனுசனா பொறந்துட்டமே..'ன்னு அலுத்துக்கிட்டு வாழவேண்டி இருக்கு!
மனுஷனுக்கு ரொம்ப முக்கியமான தேவை என்ன?...
எல்லாரும் ஏன் இவ்வளோ வேகமா ஓடிகிட்டு இருக்காங்க.. என்ன தேவை இவங்களுக்கு? நானும் எதுக்காக இப்பிடி ஒரு வாழ்கையை வாழ்ந்துகிட்டு இருக்கேன்? எதை தேடி இவ்வளோ வேகமா ஓடிகிட்டு இருக்கேன்? அப்பிடி சாதரணமா யோசிச்சு பார்த்தேன்.. பதில் கிடைக்கலை.
சரி கொஞ்சம் சீரியஸ்ஸா யோசிச்சு பார்ப்போம்னு கையில ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துகிட்டு உக்கார்ந்துட்டேன்!..
எழுத ஆரம்பிக்கும் முன்னமே சொல்லிடுறேன்.. இது ஒரு தொடர் பதிவு..
எழுத ஆரம்பிக்கும் முன்னமே சொல்லிடுறேன்.. இது ஒரு தொடர் பதிவு..
Tuesday, July 23
ச்சீய்.... கவிதைகள்! (18+)
என்னதான் சிலர் கண்ணியமாக காதல் புரிந்தாலும்.. காமம் கலக்காமல் இல்லை..!
இந்த காதல் கவிதைகளில் செறிவு குறையாமல்.. கூடியும் விடாமல் காமம் தூவி விட்டுருக்கின்றேன்..! நிஜத்தோடு கலந்து போபவர்கள் ரசியுங்கள்.. கடந்து போக நினைப்பவர்கள் கடந்து விடுங்கள்! இது சைவப் பிரியர்களுக்கு அல்ல.. அசைவ பிரியர்களுக்கு..!
".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'."
Friday, July 12
This is அமாரா ஹாலிவுட் அனுபவம் ஹே!
எனக்கு நினைவு தெரிஞ்சு நான் தியேட்டர்'ல பார்த்த முதல் ஆங்கில படம் ஜுராசிக் பார்க் தான். அப்போ எனக்கு எட்டு வயசு. கொழும்பு, கொள்ளுபிட்டி "லிபர்ட்டி" திரை அரங்கத்துல என் அண்ணா'வின் நண்பர் ஒருவர் பணியாளராக இருந்தார். அவருடைய பேருதவியால் டிக்கெட் கிடைத்து அண்ணாவோடு படம் பார்க்க போயிருந்ததாய் ஞாபகம். அதுக்கு பிறகு சில படங்கள், குடும்பத்தோடு பார்க்க போயிருக்கலாம்., ஆனால் ஞாபகத்தில் இல்லை.
ஊருக்கு போகிற சமயம்., அங்கே என் மாமாவின் மினிதியேட்டர் ஒன்றில் சில ஆங்கில படங்கள் பார்த்திருக்கிறேன். 20 அல்லது 30 பேர் அமரக்கூடிய நீளமான அறையில், சற்றே பெரிய டிவி இருக்கும். VHS Tape மூலமாக அதில் படங்கள் காண்பிக்கப்படும். 90'களில் வெளியான நிறைய தமிழ் படங்களையும் நான் இங்கே தான் பார்த்திருக்கிறேன். அடுத்தபடியாக முதன் முதலில் நண்பர்களோடு திரையரங்கில் பார்த்த ஆங்கில திரைப்படம், "டைட்டானிக்". மீண்டும் கொழும்பில் (மஜெஸ்டிக் சினிமா).
இதெல்லாம் ஏன் இப்போ சொல்லுறேன்னா எனக்கு ஹாலிவுட் படங்களை பற்றிய ஆரம்பகால ஞாபகங்களாக இருப்பவை இவை தான். இதுநாள் வரையில் எத்தினையோ ஆங்கில படங்கள் பார்த்து ரசித்திருக்கிறேன். வலைத்தளங்கள் வாசிக்க தொடங்கிய பிறகு, அண்ணன் ஜாக்கி சேகர், ஹாலிவுட் பாலா, கருந்தேள்.. இன்னபிற ஹாலிவுட் திரைப்பட விமர்சகர்களின் வலைத்தளங்கள் மூலமாக படங்களை தேடிப்பிடித்து பார்த்துவருகிறேன். மட்டுமல்லாமல் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டதும் உண்டு. அப்படியாக நான் சமீபத்தில் பார்த்த சில ஹாலிவுட் படங்களின் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பகுதி..
Monday, July 8
மேகத்தின் காதல்!
....முகிலோடு ஊடல்
கொண்டு..
வெடுக்கென திரும்பி
மின்னலிடுகிறது
கார்மேகம்!
ஓலமிட்டு ஊரெல்லாம் கூட்டி
ஒப்பாரி வைத்தது மழை!
ஊடல் ஓய்ந்து
காதலாகி விட்டதை
ஈரம் சொட்டும்
இலை சொல்லிற்று!
".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'
Friday, June 21
வாழ்க்கை: கிலோ என்ன விலை?
வேசங்கள் கூடாது என்றார்கள்..வீட்டிற்கு ஒரு வேசம்வேலைக்கு ஒரு வேசம்உறவுக்கு ஒரு வேசம்தெருவுக்கு ஒரு வேசம்ஊருக்கு நாட்டிற்கு உலகிற்குஓயாமல் வெவ்வேறு வேசம்..இயல்பினை ஏற்பவர் எவரும் இல்லை..நடிப்பினை நம்புகிறார் நிஜமென்று!நான் நல்லவனா? கெட்டவனா?..
❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥
பாடும் நிலா..! evergreen..! (02)
பாடும் நிலா என்கிற பெயரில் இருக்கின்ற கலைநயம் எவ்வளவு அழகானதோ அவ்வளவு அழகு அந்த பெயரை கேட்கும் போதெல்லாம் முழுநிலவாய் மனம் நிரம்புவதும்!
S.P.B இன்றி அமையாது என் இசை-உலகு! பதிவின் தொடர்ச்சி இது...
S.P.B இன்றி அமையாது என் இசை-உலகு! பதிவின் தொடர்ச்சி இது...
மனதின் சந்துகளில் இசை நுழைந்து ஞாபகப்பள்ளங்களில் "S.P.B." என்கிற பெயர் பாயும்போதெல்லாம் எத்தினையோ சுகமான பாடல்கள் இதயசுரங்கத்துள் ஒலித்துகொண்டே இருக்கிறது.
Sunday, June 16
S.P.B இன்றி அமையாது என் இசை-உலகு!
வாசகர்களுக்கு (நம்பி வாசிக்கலாம்னு வந்தவங்களுக்கு ):
இந்த இசை இமயத்தின் குரலுக்கு காதல் கொண்டு மயங்கிக்கிடக்கும் உங்களைப்போல, நானும் ஒரு ரசிகன்.. இல்லையில்லை வெறியன்! கடந்த 4ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாடியவருக்கு ஒரு சிறு வாழ்த்து செய்தியை நானும் சொல்லி வைக்க ஆசை பட்டேன். என் நினைவு தெரிந்த காலத்தில் இருந்து SPB என்கிற எழுத்துக்கள் மூன்றுமே என்னை கட்டிப்போடுகிற மந்திரச் சொல்! இந்த குரலின்பால் உள்ள காதலால் இந்த பதிவு சற்று முத்திப் போகலாம். முடிந்தவரை இயல்பான முறையில் (சுருக்கமாகவும்) எழுத முயற்சிக்குறேன். இது முழுக்க முழுக்க என் அனுபவமும் என் கருத்துக்களும் மட்டுமே.....
♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯....
இந்த இசை இமயத்தின் குரலுக்கு காதல் கொண்டு மயங்கிக்கிடக்கும் உங்களைப்போல, நானும் ஒரு ரசிகன்.. இல்லையில்லை வெறியன்! கடந்த 4ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாடியவருக்கு ஒரு சிறு வாழ்த்து செய்தியை நானும் சொல்லி வைக்க ஆசை பட்டேன். என் நினைவு தெரிந்த காலத்தில் இருந்து SPB என்கிற எழுத்துக்கள் மூன்றுமே என்னை கட்டிப்போடுகிற மந்திரச் சொல்! இந்த குரலின்பால் உள்ள காதலால் இந்த பதிவு சற்று முத்திப் போகலாம். முடிந்தவரை இயல்பான முறையில் (சுருக்கமாகவும்) எழுத முயற்சிக்குறேன். இது முழுக்க முழுக்க என் அனுபவமும் என் கருத்துக்களும் மட்டுமே.....
♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯....
Thursday, June 13
One நிமிட் for 5 மினிட்ஸ் (12-06-2013)
இதே தலைப்பில்.. என் முதல் பதிவில்..
பார்க்குற
/ கேட்குற / ரசிக்குற விசயங்களை வலைப்பதிவுகளா எழுதி அதை நமக்கு தெரிஞ்ச 8
பேர்கூட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த வலைமனை ஆரம்பிச்சேன். இப்படி என்
மனசுல இருக்குறதை எழுதுறதுக்கு எல்லா வசதிகளும் இருக்கும் போதும்கூட
நமக்காக நேரம் ஒத்துழைக்குதில்லை. அதனால, கிடைக்குற கொஞ்ச நேரத்தில அஞ்சோ..
ஆறோ.. விஷயங்களை ஒரே பதிவா போட்டு உங்க நேரத்தையும் சிக்கனமா மாத்தலாம்னு
தோணுச்சு. ஒரு அஞ்சு நிமிஷம் உங்க நேரத்தை ஒதுக்கி வந்துட்டு போனீங்கனா
போதும்!
என்று எழுதி தான் இந்த பதிவை ஆரம்பித்தேன். திகதி மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இதே தலைப்பில் 4வது பதிவு இது.
..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍..✍
Wednesday, May 22
Thursday, May 9
நீ கோரினால் வானம்...
உங்களுக்கு காதல் என்பது முட்டாள்தனம் என்று தோன்றினால் இதை வாசிக்க வேண்டாம். இதை வாசிப்பதால் என்ன வந்துவிடும் என்று எதிர்வினை புரிபவராய் இருந்தால் கண்டிப்பாக இதை வாசிக்கவே வேண்டாம். காரணம் இது உங்களது வாழ்கையை மாற்றப்போகும் கேள்விகளோடும், கோடிகளோடும் வரப்போகும் பதிவு இல்லை.. இதை வாசிப்பதால் உங்கள் நிகழ்கால வாழ்வின் எந்த பிரச்சினையும் மாற்றத்திற்கு உள்ளாகப்போவதும் இல்லை. அதனையும் மீறி வாசிக்க நினைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இதை உங்கள் ஆபீசிலோ.. இல்லை பொது இடத்திலோ வாசிக்காதீர்கள். (ஒரு கதை சொல்ல முதல்ல எவ்வளோ பில்ட் அப் பண்ணவேண்டி இருக்கு! ...ஷ்ஷ்ஷப்பா!!)
"நீ... கோரினால் வானம்
மாறாதா..
தினம் தீராமலே மேகம்
தூறாதா.."
இது சினிமா பாட்டுன்னு உங்களுக்கு தெரியும். ஆனால் எனக்கு, என்னோட தேவதை என்னை அழைக்கும் பாட்டு. அவளோட அழைப்பு வரும் போதெல்லாம் இது தான் என் ரிங்டோன்! எடுத்து பேசினேன்...
************************************************************************************************************
"நீ... கோரினால் வானம்
மாறாதா..
தினம் தீராமலே மேகம்
தூறாதா.."
இது சினிமா பாட்டுன்னு உங்களுக்கு தெரியும். ஆனால் எனக்கு, என்னோட தேவதை என்னை அழைக்கும் பாட்டு. அவளோட அழைப்பு வரும் போதெல்லாம் இது தான் என் ரிங்டோன்! எடுத்து பேசினேன்...
Tuesday, May 7
ஒரு பாட்டு.. இரண்டு படம்..
♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯.... ♩ ♪ ♫ ♬ ♭ ♮ ♯....
இசைக்கும் எனக்குமான உறவு இப்பொழுதெல்லாம் அதிகம் நீடிக்கின்றது. நிறைய தமிழ் திரையிசை பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். பார்க்கவும் நேரம் அமைவதுண்டு. youtube இணையத்தளம் அந்த வாய்ப்பினை இலவசமாகவே வழங்குகிறது. பெரும்பாலும் பால்ய காலத்தில் வானொலியில், கேசட்களில் மட்டுமே கேட்ட இடைக்கால பாடல்களை ஒளிவடிவில் பார்க்கும்போது அவை படமாக்கப்பட விதம் சிரிப்பை தருகிறது. சகஜமாக இருந்திருக்கலாம் அந்த காலகட்டத்தில் அப்படி படமெடுப்பது. இன்றைய தலைமுறையினரின், ரசனைகளில் வித்யாசம் நிறைய வந்துவிட்டது. செவிக்கு மட்டுமே விருந்தாக அமைந்துவிடும் பாடல்கள் போதும் என்றே தோன்றுகிறது. அமைதியான மெல்லிசை வடிவம் தான் என் சாய்ஸ். இப்பொழுதும் ஏதேனும் ஒரு புதிய திரைப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ந்தவுடன், நான் முதலில் தேடுவது அப்படத்தில் இருக்கும் மெல்லிசை பாடலினை தான். அப்படி தேடிய பாடலின் ஒரு வீடியோ வடிவம் உங்களுக்காக..
Saturday, April 20
Saturday, April 13
முன்னபின்ன கொஞ்சம் பக்கத்தை காணோம்..
...இன்று/ நேரம்: இரவு 10.35
இன்னும் கொஞ்சம் நேரம் தான் இந்த வலி. அப்பிடியே கண்ணை மூடிக்கோ. உலகமே மறந்துரும். எதையும் உணர முடியாது. உடம்புல எதுவுமே இல்லாத மாதிரியும் காத்துல பறக்குற மாதிரியும் இருக்கும். யாருமே இல்லாத ஒரு இடத்துக்கு உன்னை கூட்டிகிட்டு போயிடும். சரியா இன்னும் ரெண்டு நிமிஷம் தான் இருக்கு. ராஜ்.. ராஜ்.. நான் பேசுறது கேட்குதா.. ராஜ்.....
Friday, April 12
...யோசிக்கிறேன்!
...தொடர்ந்து மனவேதனைக்கு உள்ளாகி வெறுப்போடும், விரக்தியோடும் காலத்தை கழிக்கின்ற, ஒரு நண்பனுக்கோ அல்லது நண்பிக்கோ ஆறுதல் சொல்லிவிட்டு நகர்ந்து வரும் போது, நமக்கு ஆறுதல் சொல்ல யாரோ ஒருவரை தேட வேண்டி இருக்கிறது! ...யோசிக்கிறேன்!
...எத்தினையோ சந்தர்பங்களில் அறிமுகமில்லாத புதியவர்களை வாழ்கையில் சந்திக்கிறோம், உரையாடுகிறோம், கடந்துவருகிறோம். ஒருசிலரிடம் எதையோ ரசிக்கமுடிகிறது. ஒரு சில நேரத்தில் சில புதியவர்களிடம் எந்த ஈடுபாடும் வருவதே இல்லை. ஒருவரை நேசிக்கவும், வெறுக்கவும் காரணம் தேவைப்படுகிறது. அடையாளங்களையும், தகுதிகளையும் வைத்து ஒருவரை நிர்ணயிக்குற மனதை ஏன் படைத்தான் ஆண்டவன்? ...யோசிக்கிறேன்!
Saturday, March 30
Thursday, March 28
One நிமிட் for 5 மினிட்ஸ் (27-03-2013)
இந்த தலைப்பின் விளக்கம் மற்றும் முதல் பதிவு இங்கே.
*************************************************************************************
மிக சிலரோடு பேசும்போது மட்டும் தான் மனதை இறுக்கமாக்கி கொள்ளாமல் பேசமுடிகிறது.மனதில் எது தோன்றுகிறதோ அதை பேசிவிடக்கூடிய தன்மை அந்த சில உறவுகளிடம் மட்டும் தான் வாய்க்கின்றது. அந்த உறவுகளை தான், எவ்வளவு காலம் கழித்தும் மீண்டும் சந்திக்கும்போது உரிமையோடு இறுக்கி அணைத்து கொள்ள முடிகிறது. அப்பிடியான உறவுகளை ஒரு குறிப்பிட்ட வயதின் பின்னர் புதிதாய் ஏற்படுத்திக்கொள்ள முடிவதில்லை என்பது தான் துரதிர்ஷ்டம்.
Sunday, March 3
Tuesday, February 26
Monday, February 18
One நிமிட் for 5 மினிட்ஸ் (18-02-2013)
இந்த தலைப்பின் விளக்கம் மற்றும் முதல் பதிவு இங்கே.
*******************************
என் நண்பர் ஒருவர் எடுத்த புகைப்படம் தான் மேல இருக்கு. பெயர் பிரசாத் ஹரி. வாழ்க்கை மேல நம்பிக்கை நிறைய இருக்குற அழகான ஒரு இளைஞர். செய்ற வேலைக்கும் எடுக்குற புகைப்படங்களுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை! நிஜ உலகத்துல நடக்குற விசயங்களை, நிழற்படமா எடுக்கும் போது, பகல் வானம் போல மனசும் பிரகாசமா இருக்குதுன்னு சொல்லுறாரு! அந்த நம்பிக்கை அவருக்கு நிறைய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தணும். இந்தா இருக்குது அவரோட நம்பிக்கை!
*******************************
Saturday, February 16
சரிகம"காதல்"பதனி -ஒரு ரசனை கெட்டவனின் பார்வையில்..
வேண்டுகோள் தயவு செய்து இந்த பதிவை படிக்காமல் விட்டுவிடாதீர்கள்!
ஒரு சிந்தனை உருவாகி அதை சீரியஸா எடுத்திக்கிட்டு, அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து வெற்றியும் அடையணும்னா அதுக்கு தேவையான உழைப்பை கொடுக்கணும்! கலைப்படைப்பு என்று வரும்போது அதன் வெற்றி அதை ரசிப்பவர்களின் கைகளில் விடப்படுகிறது!
நேரடியா விசயத்துக்கு வாரேன். இந்த குறும்படம் உருவாகியதன் பின்னணி ஓரளவுக்கு தெரியும். படக்குழுவில் அநேகமானோரை தனிப்பட்ட ரீதியில் அறிவேன். பரீட்சார்த்த முயற்சி என்பதை மனதில் இருத்திக்கொண்டுதான் சிந்தனையை படமாக்க முயற்சித்தார்கள். திரைப்பட அனுபவம் போலவே திரைக்கருவிகளும் அதிகம் இல்லாத, ஒரு புதிய குழுவின் புது
முயற்சி இது!
Friday, February 15
சரிகம"காதல்"பதனி - குறும்திரைப்படவிமர்சனம்
எச்சரிக்கை: தயவு செய்து இந்த விமர்சனத்தை (ரொம்ப சீரியஸா) படிக்காதிங்க!
அரை மணித்தியாலத்திற்கும் சற்று குறைவாக ஓடக்கூடிய கொஞ்சம் நீளமான
குறும்திரைப்படம் இது! திரை அனுபவம் போலவே திரைக்கருவிகளும் அதிகம் இல்லாத, இலங்கை திருநாட்டின் ஒரு புதிய குழுவின் புது
முயற்சி. அந்த முயற்சியில் எப்படியான ஒரு வெற்றியை கண்டு இருக்கிறார்கள்?
தொடர்ந்து வரும் விமர்சனத்தை படியுங்கள்..
(மிக ஆழமான கவனித்தல்களை, கொஞ்சம் நீளமாக சொல்லும் பதிவு என்றதனால இரண்டு பகுதிகளாக இந்த விமர்சனம் எழுதப்படுகிறது.. )
விமர்சனம் எழுதுறதுக்கு
எந்த முன் அனுபவமும் எனக்கில்லை. எல்லாமே என் நண்பர்களின் அல்லது அவ்வாறு நான் கருதுபவர்களின் ஒரு கன்னி முயற்சி, எனும் போது
நானும், கிடைக்குற ஒரு வாய்ப்பை வச்சு இப்பிடி ஒரு நறுக் விமர்சனத்தை
சொல்லிட்டு போறதுதான் நல்லது! வளர்ற புள்ளை தானேன்னு குறைகளை அதிகமா கண்டுக்கமாட்டாங்க. ரசிக்குற விஷயத்தை சொல்லுறதுக்கு அனுபவமும் அதிகம் தேவை இல்லைதானே?
Wednesday, February 13
தலைப்பு தேடினேன்.. கிடைக்கல!
திடீருன்னு நாலு நாள் லீவுல இருந்துட்டு நாளைக்கு திரும்பவும் வேலைக்கு போக போறேன்.
இந்த நாலு நாளும் சொல்லிக்கும் படியா எதையும் செய்ய கிடைக்கல. என் கூட தங்கியிருக்குற நண்பர்கள் அவங்கவங்க ஊருக்கு கிளம்பி போயிட்டாங்க.இவ்வளோ பெரிய அப்பார்ட்மென்ட்ல நானும் நான் சார்ந்த இயக்கமும் மட்டும் தான் இயங்கிகிட்டு இருக்கு. அதிகமாக எந்த சலனமும் இல்லாத ஒரு வீட்டுக்குள்ள அடங்கிப்போய் வாழ்ந்துகிட்டு இருக்கேன். ஆனாலும் என் தனிமைக்கு இருந்தது என் கணணியும் அதன் இணையத் தொடர்பும் தான்.
உரையாடலுக்கு யாரும்மில்லாத ஒரு ரூம்ல இருக்குறப்போது கிடைக்குற தனிமையும், நேரமும் நிறைய யோசிக்க வைக்குது. எரிச்சல், மனஉளைச்சல் எல்லாம் இந்த காலத்துல எல்லாருக்கும் சாதாரணமானது தான்! அதிகமா வேலை செய்தாலும் அது இருக்கும். ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருந்தாலும் இருக்கும். இந்த மாதிரி மன உணர்வை பாதிக்கும் தனிமைக்குள் இருக்கும் போது என்னோட எண்ணங்களை திசை திருப்புறதுக்கு இசையும், திரைப்படங்களும், வாசிப்பும், அப்பறம் கொஞ்சம் பிரார்த்தனையும் துணையா இருந்தது.
இந்த நாலு நாளும் சொல்லிக்கும் படியா எதையும் செய்ய கிடைக்கல. என் கூட தங்கியிருக்குற நண்பர்கள் அவங்கவங்க ஊருக்கு கிளம்பி போயிட்டாங்க.இவ்வளோ பெரிய அப்பார்ட்மென்ட்ல நானும் நான் சார்ந்த இயக்கமும் மட்டும் தான் இயங்கிகிட்டு இருக்கு. அதிகமாக எந்த சலனமும் இல்லாத ஒரு வீட்டுக்குள்ள அடங்கிப்போய் வாழ்ந்துகிட்டு இருக்கேன். ஆனாலும் என் தனிமைக்கு இருந்தது என் கணணியும் அதன் இணையத் தொடர்பும் தான்.
உரையாடலுக்கு யாரும்மில்லாத ஒரு ரூம்ல இருக்குறப்போது கிடைக்குற தனிமையும், நேரமும் நிறைய யோசிக்க வைக்குது. எரிச்சல், மனஉளைச்சல் எல்லாம் இந்த காலத்துல எல்லாருக்கும் சாதாரணமானது தான்! அதிகமா வேலை செய்தாலும் அது இருக்கும். ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருந்தாலும் இருக்கும். இந்த மாதிரி மன உணர்வை பாதிக்கும் தனிமைக்குள் இருக்கும் போது என்னோட எண்ணங்களை திசை திருப்புறதுக்கு இசையும், திரைப்படங்களும், வாசிப்பும், அப்பறம் கொஞ்சம் பிரார்த்தனையும் துணையா இருந்தது.
Subscribe to:
Posts (Atom)