கொஞ்ச நாளைக்கு முதல்ல ஒரு blog ஆரம்பிச்சேன். என்னத்துக்கு இதை ஆரம்பிச்சேன்.. எதுனால ஆரம்பிச்சேன்னு சொல்லி பதிவு போட்டாச்சு. இனிதான் "முதல் பதிவை" உத்தியோகபூர்வமா எழுதி ஆரம்பிக்கணும். நல்ல ஒரு விஷயம் கிடைச்சா எழுதுனம்'னு உட்காந்துகிட்டு, நின்னுகிட்டு, படுத்துகிட்டு, வேலை செய்துகிட்டு.. கிட்டு.. கிட்டு'ன்னு.. ஏதாச்சும் கிட்டுமானு யோசிச்சு பார்த்தப்போ, பல விஷயங்கள் மனசுல வந்து, தட்டுச்சு. எதை எழுதுறது எதை விடுறதுன்னு தெரியாம என்னவெல்லாம் தோணுச்சோ எல்லாத்தையும் draft பண்ணிகிட்டேன்.அப்பிடி(அப்fரிடி இல்லீங்க) draft பண்ணுன விஷயங்கள் மட்டும் ரெண்டு டசன் இருக்கும்.(அட.. நம்புங்க!!).
Sunday, October 28
Sunday, October 21
blog என்று ஒரு காதல்..!
2008 'இல் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், அலுவலக கணனியில் எதற்கோ தமிழில் டைப் செய்து, எதையோ தேடப்போக எனக்கு அறிமுகமானது தான் தமிழ் வலைப்பூ-தளம். அதன்பிறகு என்னவெல்லாம் தேடி பார்த்தேன் என்பது இளைய சமூகத்தின் தமிழ் வாசிப்பு ஆர்வத்திற்கு ஒரு சான்று.
அங்கிங்கெனாதபடி எதுவெல்லாம் என் கண்ணில்பட்டதோ, வாசிக்கலானேன். பலரது வலைமனைக்குள் குருட்டுத்தனமாய் எட்டிப்பார்ததினாலேயே அவர்களின் எழுத்துக்கு கள்ளக்காதலன் ஆனேன்.
அங்கிங்கெனாதபடி எதுவெல்லாம் என் கண்ணில்பட்டதோ, வாசிக்கலானேன். பலரது வலைமனைக்குள் குருட்டுத்தனமாய் எட்டிப்பார்ததினாலேயே அவர்களின் எழுத்துக்கு கள்ளக்காதலன் ஆனேன்.
Tuesday, October 16
என்ன செய்ய சொல்லுறிங்க?.....
....பின்ன என்னங்க?.. நானும் எவ்வளோ நாள் தான் மனசுக்குள்ளயே யோசனை பண்ணிக்கிட்டு இருக்குறது..!
சுமார் 5வருசமா நானும் மத்தவங்களோட blogs மட்டுமே எட்டிபார்த்துகிட்டு இருக்கேன்.. எனக்கும் ஆசை இருக்காதா? அதுதான் இந்த பக்கம்!! கிடைக்குற நேரத்துல என் மனசுல தோணுற கவிதையோ.. கதையோ.. இல்லனா ஏதாச்சும் ஒரு குப்பையோ.. கிறுக்கிட்டு போறேன்..! உங்களுக்கு நேரமிருந்தா வந்துட்டு போங்க..
Subscribe to:
Posts (Atom)