....முகிலோடு ஊடல்
கொண்டு..
வெடுக்கென திரும்பி
மின்னலிடுகிறது
கார்மேகம்!
ஓலமிட்டு ஊரெல்லாம் கூட்டி
ஒப்பாரி வைத்தது மழை!
ஊடல் ஓய்ந்து
காதலாகி விட்டதை
ஈரம் சொட்டும்
இலை சொல்லிற்று!
".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'
யார் கண்ணிலும் பட்டுவிடாமல்
தூரல்களுக்கிடையில் சிக்கியபடி
இ-டை-வெ-ளி
கண்டுபிடித்து
தூரல்களுக்கிடையில் சிக்கியபடி
இ-டை-வெ-ளி
கண்டுபிடித்து
இ
ற
ங்
கி
வருகிறது
பூமி மீதான
ற
ங்
கி
வருகிறது
பூமி மீதான
மேகத்தின் காதல்!
".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'
கூட்டம் கூட்டமாக
கிளம்பிய காட்டுத் தீயிடம்
சேதி சொல்லி அனுப்பியதில்
களைகட்டி இருந்தது
மேகத்திருவிழா!
".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'
மழை முடிகிற
இடத்தில்
அடுத்த மழைக்காய்
காத்துக்கிடக்கும்
காதலர்கள்
...பாக்கியசாலிகள்!
".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'
மழையை ரசிப்பவர்கள்
மனிதக்குழந்தைகள்!
நனைபவர்கள்...
மழையின் குழந்தைகள்!
".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'
நிசப்தத்தை கிழித்துக்கொண்டு
"சோ..."வென பெய்யும்
மழை வேண்டும்..
குழந்தைகளின்
காகிதக்கப்பல்
உயிர்நீங்கியதும்
சாந்தியடைய...
|
Tweet |
No comments:
Post a Comment