Monday, July 8

மேகத்தின் காதல்!


....முகிலோடு ஊடல்
கொண்டு..
வெடுக்கென திரும்பி 
மின்னலிடுகிறது 
கார்மேகம்!

ஓலமிட்டு ஊரெல்லாம் கூட்டி 
ஒப்பாரி வைத்தது மழை!

ஊடல் ஓய்ந்து 
காதலாகி விட்டதை
ஈரம் சொட்டும் 
இலை சொல்லிற்று!


".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'




யார் கண்ணிலும் பட்டுவிடாமல்
தூரல்களுக்கிடையில் சிக்கியபடி
இ-டை-வெ-ளி 

கண்டுபிடித்து 


ங்
கி
 வருகிறது
பூமி மீதான 
மேகத்தின் காதல்!

".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'



கூட்டம் கூட்டமாக
கிளம்பிய காட்டுத் தீயிடம் 
சேதி சொல்லி அனுப்பியதில் 
களைகட்டி இருந்தது 
மேகத்திருவிழா!

".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'

 
மழை முடிகிற
இடத்தில் 
அடுத்த மழைக்காய்
காத்துக்கிடக்கும்
காதலர்கள்
...பாக்கியசாலிகள்!









".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'


மழையை ரசிப்பவர்கள்
மனிதக்குழந்தைகள்!
நனைபவர்கள்...
மழையின் குழந்தைகள்!













".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'

 


நிசப்தத்தை கிழித்துக்கொண்டு
 "சோ..."வென பெய்யும்
மழை வேண்டும்..
குழந்தைகளின்
காகிதக்கப்பல்
உயிர்நீங்கியதும்
சாந்தியடைய...

Post Comment

No comments: