வேசங்கள் கூடாது என்றார்கள்..வீட்டிற்கு ஒரு வேசம்வேலைக்கு ஒரு வேசம்உறவுக்கு ஒரு வேசம்தெருவுக்கு ஒரு வேசம்ஊருக்கு நாட்டிற்கு உலகிற்குஓயாமல் வெவ்வேறு வேசம்..இயல்பினை ஏற்பவர் எவரும் இல்லை..நடிப்பினை நம்புகிறார் நிஜமென்று!நான் நல்லவனா? கெட்டவனா?..
❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥
பிறந்தேன் தவழ்ந்தேன்நடை பழகி மொழி பழகிமேன்மைக்கலைகள் கற்றறிந்துதொழில் பயின்றேன்..மூத்தோர் இளையோர்மேலோர் கீழோர்உற்றவர் அற்றவர்ஆயிரம் பேர் கடந்தேன்..பொருள் ஈன்றேன்.. புகழ் ஈன்றேன்..காலத்தின் கரங்களில்மீண்டும் எப்போது குழந்தையாவேன்?
❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥
ஒத்திகை இல்லாமலேநாடகம் போடுகிறேன்..!நான் நன்றாக நடிப்பதாய்பார்போரெல்லாம் பாராட்டிஒப்பற்ற கலைஞனாய்எனக்கோர் அங்கீகாரமும் உண்டு!இந்த வேடமும்.. அரிதாரமும்கலைப்பது எப்போது?எனக்கான என்னைநான் அறிவது எப்போது?முடியாமல் தொடர்கிறதுநாடகம்!விட்டு விலகி மேடை இறங்க விடாமல்இன்னொரு ஒத்திகை இல்லாதநாடகத்திற்காய் தயார் செய்கிறதுவாழ்கை!நிஜத்தில் நான் யார்?
❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥❦ ❧❃❂❁❀ ✪✣✤✥ ✦❉❥
தனியே எனக்கோர்
பெயர் தந்தார்..
உற்றது இன்னதென
உரைத்து வைத்தார்..
மோகனப்புன்னகை
கற்றுத்தந்தார்..
மற்ற கலைகள் யாவையும்
அறிய வைத்தார்..
தனியொரு பிறவியில்
சரிபாதி கடந்துவிட்டேன்!
இற்றைக்கு வரைக்கும் புரியவில்லை
வாழ்க்கை: கிலோ என்ன விலை?
|
Tweet |
No comments:
Post a Comment