Wednesday, December 19
Sunday, December 16
ஏலேய்!! இவிங்கள தெரியுமாலேய்? (strictly for facebook users)
அது ஒன்னுமில்லீங்க. ரொம்ப நாளுக்கு முதல்ல எதோ ஒரு வேலையா கூகிள் கூகிள் பண்ணி பார்த்துட்டு இருந்தப்போ.. இந்த விஷயம் கண்ணுல பட்டுச்சு. படிச்சு பார்த்துட்டு, நம்ம சும்மா இருக்கும் போது (எப்போவுமே இல்லை.. எப்போவாச்சும்!) இதை ஒரு பதிவா போடுவோம்னு எடுத்து வைச்சுருந்தேன். facebook users பற்றி ரொம்ப பெரிய ஆராய்ச்சி பண்ணிருக்காங்க.
இதை படிக்க முதல்ல உங்ககிட்ட ஒரு கேள்வி:
நீங்க எத்தனை வருசமா facebook பாவிக்கிறீங்க?
Tuesday, December 11
ரஜினி ரசிகனாகிய நான்!
ஒரு பதிவு எழுதனும்னு யோசிக்கும் போது மனசுல பல விசயங்கள் தோணும். இதுதான் கரு அப்பிடின்னு தெளிவா தெரிஞ்சுகிட்டுதான் எழுத ஆரம்பிப்பேன். ஆனால், "ரஜினிகாந்த்" என்கிற ஒரு பெயரை மனசு சொல்லும் போது, அதுக்கு துணையாக மனசுல பலவிதமான எண்ணங்கள் சுத்த ஆரம்பிக்குது. என்னன்ன விதமாக இந்த பதிவை எழுதலாம்னு நினைச்சுகிட்டே எழுத ஆரம்பிக்குறேன்.
தமிழ்சினிமா மீது இருக்குற மோகம் எனக்கு ரொம்ப அலாதியானது."கலை" ஆர்வம் வர இந்த தமிழ்சினிமா மிகப்பெரும் காரணம். அதனாலதான் என்னோட இந்த வலைமனையில பதிவுகள் மூலமா நான் ரசிக்குற கலைஞர்கள் பற்றியும் பதிவு எழுத ஆரம்பிச்சுருக்கேன்! இசைஞானி பற்றிய பதிவு தான் முதல்! இப்போ ரஜினி என்கிற சூப்பர் ஹீரோ பற்றி என் எண்ணங்கள்..
"Rajinikanth was named by Forbes India as the most influential Indian of 2010. He was also named one of the most influential people in Asia by Asiaweek."
Monday, December 10
One நிமிட் for 5 மினிட்ஸ் (09-12-2012)
8ஆவது பதிவு. என் வாழ்க்கைல 8 ஒரு லக்கி நம்பர். நிறைய எட்டாம் இலக்க தொடர்புகள் என் வாழ்க்கைல இருக்கு. அதைப்பத்தி ஒரு தனி பதிவே போடலாம். அது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ இந்த பதிவு எதுக்குனா,.....
பார்க்குற / கேட்குற / ரசிக்குற விசயங்களை வலைப்பதிவுகளா எழுதி அதை நமக்கு தெரிஞ்ச 8 பேர்கூட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த வலைமனை ஆரம்பிச்சேன். இப்படி என் மனசுல இருக்குறதை எழுதுறதுக்கு எல்லா வசதிகளும் இருக்கும் போதும்கூட நமக்காக நேரம் ஒத்துழைக்குதில்லை. அதனால, கிடைக்குற கொஞ்ச நேரத்தில அஞ்சோ.. ஆறோ.. விஷயங்களை ஒரே பதிவா போட்டு உங்க நேரத்தையும் சிக்கனமா மாத்தலாம்னு தோணுச்சு. ஒரு அஞ்சு நிமிஷம் உங்க நேரத்தை ஒதுக்கி வந்துட்டு போனீங்கனா போதும்!
ஆனா இதுனால முழுப்பதிவுகள் எல்லாம் வராமல் போயிடாது.. அந்த அவஸ்தை எல்லாம் கண்டிப்பா இருக்கும்... ஏன்னா நீங்க எல்லாம் ரொம்பஅஅஅ.. நல்லவங்க! நான் எதை எழுதுனாலும் படிப்பீங்கன்னு நம்மம்ம்ம்பி எழுதிகிட்டு இருப்பேன்! but இப்போதைக்கு,
One நிமிட் for five மினிட்ஸ்...
*******************************************************************************************
Tuesday, November 27
இளையராஜா
"I have understood music across several parts of the world. Have sung in several languages. With that experience, I can say confidently that there is no match to Indian Classical music. And in that form of music, Illayaraja has explored and mastered.""தமிழனாய் பிறந்ததற்கு பெருமை படக்கூடியவை என்ன என்ன?ன்னு ஒரு பட்டியல் போட்டால், தமிழ் இசைக்கு ஒரு இடம் இருக்கும். அதில் இளையராஜா'வுக்காக ஒரு தனி இடம் இருக்கும்!"
-Dr. Balamurali Krishna-
***********************************************************
Tuesday, November 20
கொஞ்சம் இதையும் சொல்லிடுறேன்..!
கொஞ்ச நாளைக்கு முதல்ல என்னோட fb'ல இப்படி ஒரு status போட்டேன்..
"கிடைக்குற கொஞ்ச நேரத்துல.. youtube பார்ப்பேனா? blog எழுதுவேனா? பாட்டு கேட்பேனா? skype'ல பேசுவேனா? இல்லைனா fb, twitter'ல status போடுவேனா?... அட போங்கப்பா.. "உனக்கு வேற வேலை எதுவுமே இல்லையா"ன்னு என்னை வம்புக்கு இழுப்பீங்க.. நம்பி ஒரு வேலை பண்ண முடியாது..!"
உடனே, "Building மேல இருக்குறவனுக்கா?"னு மொக்கை போடாம தொடர்ந்து படிங்க..
"கிடைக்குற கொஞ்ச நேரத்துல.. youtube பார்ப்பேனா? blog எழுதுவேனா? பாட்டு கேட்பேனா? skype'ல பேசுவேனா? இல்லைனா fb, twitter'ல status போடுவேனா?... அட போங்கப்பா.. "உனக்கு வேற வேலை எதுவுமே இல்லையா"ன்னு என்னை வம்புக்கு இழுப்பீங்க.. நம்பி ஒரு வேலை பண்ண முடியாது..!"
இதை ஏன் இப்போ சொல்லுறேன்னா, நான் மட்டும் கிடையாது இங்க நிறைய பேர் இந்த மாதிரி தனக்கு கிடைக்குற நேரத்துல தன்னோட மனசுக்கு பிடிச்ச விசயங்களை கூட செய்ய நேரமில்லாம ஓடிகிட்டு தான் இருக்கோம். உலகமே தன்னோட வாழ்க்கைய தேடி தான் ஓடிகிட்டு இருக்கு. இலக்கு தேடி ஓடுறவனுக்கு வெற்றி அடையனும்னு தோணும். வெற்றியடைஞ்சவனுக்கு அந்த வெற்றியை தக்க வைச்சுகனும்னு தோணும். எறும்பு கூட்டை பார்க்கும் போது நமக்கு எப்பிடி விளங்குமோ அப்பிடி தான், மேல இருக்குறவனுக்கு நம்மளை பார்க்கும் போது விளங்கும்.
உடனே, "Building மேல இருக்குறவனுக்கா?"னு மொக்கை போடாம தொடர்ந்து படிங்க..
Wednesday, November 14
Thursday, November 1
Sunday, October 28
"Q" Tv புகழேந்தியும் நானும்
கொஞ்ச நாளைக்கு முதல்ல ஒரு blog ஆரம்பிச்சேன். என்னத்துக்கு இதை ஆரம்பிச்சேன்.. எதுனால ஆரம்பிச்சேன்னு சொல்லி பதிவு போட்டாச்சு. இனிதான் "முதல் பதிவை" உத்தியோகபூர்வமா எழுதி ஆரம்பிக்கணும். நல்ல ஒரு விஷயம் கிடைச்சா எழுதுனம்'னு உட்காந்துகிட்டு, நின்னுகிட்டு, படுத்துகிட்டு, வேலை செய்துகிட்டு.. கிட்டு.. கிட்டு'ன்னு.. ஏதாச்சும் கிட்டுமானு யோசிச்சு பார்த்தப்போ, பல விஷயங்கள் மனசுல வந்து, தட்டுச்சு. எதை எழுதுறது எதை விடுறதுன்னு தெரியாம என்னவெல்லாம் தோணுச்சோ எல்லாத்தையும் draft பண்ணிகிட்டேன்.அப்பிடி(அப்fரிடி இல்லீங்க) draft பண்ணுன விஷயங்கள் மட்டும் ரெண்டு டசன் இருக்கும்.(அட.. நம்புங்க!!).
Sunday, October 21
blog என்று ஒரு காதல்..!
2008 'இல் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், அலுவலக கணனியில் எதற்கோ தமிழில் டைப் செய்து, எதையோ தேடப்போக எனக்கு அறிமுகமானது தான் தமிழ் வலைப்பூ-தளம். அதன்பிறகு என்னவெல்லாம் தேடி பார்த்தேன் என்பது இளைய சமூகத்தின் தமிழ் வாசிப்பு ஆர்வத்திற்கு ஒரு சான்று.
அங்கிங்கெனாதபடி எதுவெல்லாம் என் கண்ணில்பட்டதோ, வாசிக்கலானேன். பலரது வலைமனைக்குள் குருட்டுத்தனமாய் எட்டிப்பார்ததினாலேயே அவர்களின் எழுத்துக்கு கள்ளக்காதலன் ஆனேன்.
அங்கிங்கெனாதபடி எதுவெல்லாம் என் கண்ணில்பட்டதோ, வாசிக்கலானேன். பலரது வலைமனைக்குள் குருட்டுத்தனமாய் எட்டிப்பார்ததினாலேயே அவர்களின் எழுத்துக்கு கள்ளக்காதலன் ஆனேன்.
Tuesday, October 16
என்ன செய்ய சொல்லுறிங்க?.....
....பின்ன என்னங்க?.. நானும் எவ்வளோ நாள் தான் மனசுக்குள்ளயே யோசனை பண்ணிக்கிட்டு இருக்குறது..!
சுமார் 5வருசமா நானும் மத்தவங்களோட blogs மட்டுமே எட்டிபார்த்துகிட்டு இருக்கேன்.. எனக்கும் ஆசை இருக்காதா? அதுதான் இந்த பக்கம்!! கிடைக்குற நேரத்துல என் மனசுல தோணுற கவிதையோ.. கதையோ.. இல்லனா ஏதாச்சும் ஒரு குப்பையோ.. கிறுக்கிட்டு போறேன்..! உங்களுக்கு நேரமிருந்தா வந்துட்டு போங்க..
Subscribe to:
Posts (Atom)