Tuesday, July 23

ச்சீய்.... கவிதைகள்! (18+)

என்னதான் சிலர் கண்ணியமாக காதல் புரிந்தாலும்.. காமம் கலக்காமல் இல்லை..!
இந்த காதல் கவிதைகளில் செறிவு குறையாமல்.. கூடியும் விடாமல் காமம் தூவி விட்டுருக்கின்றேன்..! நிஜத்தோடு கலந்து போபவர்கள் ரசியுங்கள்.. கடந்து போக நினைப்பவர்கள் கடந்து விடுங்கள்! இது சைவப் பிரியர்களுக்கு அல்ல.. அசைவ பிரியர்களுக்கு..!

 ".".".".".".".".".".".".".".".".".'.".".'.'.".'.".".'.'.".'.'.".'.'.".".".".".".".".".".".".".".".".".'."






கடலில் நனைந்து -நீ
எழுந்து வந்ததும்  
பொங்கி வழிகிறது..அலை

............உன் கழுத்தின் கீழே!

♂.. ♥.. ♀.. 
 
உன் வெட்கம் களைந்து
விஷயம் அறிந்து கொள்வதட்குள்
போதும் போதும் என்றாகிவிடுகிறது..!

♂.. ♥.. ♀..

இன்று வீட்டில் 
நீ துப்பட்டா கழற்றி 
வீசிய இடத்தில்
அருகிலேயே ஓரமாய் 
விழுந்து கிடக்கும் 
பகலெல்லாம் பரவிக் கிடந்த
என் விரல் ஸ்பரிசம்..!

♂.. ♥.. ♀.. 
தெறிக்க தெறிக்க
முத்தமிட்டேன்..
நீ நாணிக் கோணியதை
ரசித்தபடியே..!

♂.. ♥.. ♀.. 



..மேலும் 
உன் உள்ளங்கை கதகதப்பில்,
அக்குள் வாசனையில்,
மார்புச் சூட்டில்,
பாதங்களின் மென்மையில்..
கலாபம் செய்ய 
வரம் கொடு!!

♂.. ♥.. ♀.. 

சேலை கட்டிய படி
நீ நடந்து வருகையில்..
உன் பின்னல் முடிவில்
கட்டிதொங்கும் குஞ்சம்
 ஆகி விடத்துடிக்கும்
"பின்"நவீனத்துவவாதி நான்!

♂.. ♥.. ♀..

சகியே... ஆணையிடு!
உன் நூலாடை மெல்ல அவிழ்த்து..
என்னை அணியத்துடிக்கிறேன்..!!!

♂.. ♥.. ♀..

இதழ் திறந்து
முத்தமிடத் துடிக்கையில்
என் விரல் கோர்த்து..
களித்திடும் நீயா
ஒன்றும் தெரியாதவள்!

♂.. ♥.. ♀..

என் இனியவளே..
நீ மோகம் கொள்ள
எனக்கு உன் 
சுட்டுவிரல் போதும்..
நான் அப்போதுமட்டும்
குழந்தை..!

♂.. ♥.. ♀..

அன்றொரு நாள்..
மழைகாலம்..
பூங்காவில்
ஆலமரக் குடையில்
உன்னருகில் நான்!
காதலி நீ கவிதை கேட்டாய்..
"மேடு பள்ளம்
வளைவு நெளிவு
ஏற்றம் இறக்கம்..
இவை கொண்ட பாதை நீ..!
உன்னில் மழைவெள்ளமாய்
என்னை பொழியவிடு..!"யென்று
 முடிப்பதற்குள்..

"ச்சீய்...."யென்று
சிலிர்த்தாய்..

உன் எச்சில் தூறல்
எனை நனைத்து
என் செல்களில்
எல்லாம் அடை-மழை!

♂.. ♥.. ♀..

Post Comment

2 comments:

Unknown said...

Nice

Vasumathi said...

ரசனைகளின் அரசன்