Monday, January 13

கஞ்சா வைச்ச கண்ணு..

நீ அவனை அப்படி பேசிருக்க கூடாதும்மா.. நம்ம பக்கமும் பிழை இருக்கு! என்ன இருந்தாலும்  அந்த இடத்துல அவளோ பேருக்கு முன்னால நீ அவனை..

சொல்லிக்கொண்டிருக்கும்போதே தனது உள்ளங்கையை விரித்து, அம்மாவின் முன் நீட்டினாள் திவ்யா.

அப்பாகிட்ட நான் பேசிக்குறேன்!

-என்றவள், இனி பேச எதுவுமில்லை என்பது போல எழுந்து போய் தன் அறையினை தாழிட்டு கட்டில் மேல் தொப்பென்று வீழ்ந்தாள்.


கதையை படிக்க தொடங்கும் நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு, இந்தக் கதையில்(லும்) நீங்கள் எதிர்ப்பார்க்கும் டுவிஸ்ட்டோ  அதை சார்ந்த எந்தவொரு சமாச்சாரமுமோ கிடையாது என்பதை தெளிவாக சொல்லிவைக்க கடமைப்பட்டுள்ளேன். அதையும் தாண்டி நீங்கள் , வேறு ஒன்றை தேடி வந்திருந்தால் கதையை தொடருங்கள்! தேடல் ஜெயிக்கட்டும்!

********************************************************************************