....பின்ன என்னங்க?.. நானும் எவ்வளோ நாள் தான் மனசுக்குள்ளயே யோசனை பண்ணிக்கிட்டு இருக்குறது..!
சுமார் 5வருசமா நானும் மத்தவங்களோட blogs மட்டுமே எட்டிபார்த்துகிட்டு இருக்கேன்.. எனக்கும் ஆசை இருக்காதா? அதுதான் இந்த பக்கம்!! கிடைக்குற நேரத்துல என் மனசுல தோணுற கவிதையோ.. கதையோ.. இல்லனா ஏதாச்சும் ஒரு குப்பையோ.. கிறுக்கிட்டு போறேன்..! உங்களுக்கு நேரமிருந்தா வந்துட்டு போங்க..
அப்புறம் இன்னொரு விஷயம்.. இந்த வலைமனை பக்கம்(அதுதாங்க Blog page) என்னோட
சொந்த Property! இதுல எனக்கான உணர்வுகள் தான் அதிகமா இருக்கும்..(பின்ன
என்ன? மத்தவங்களா உனக்காக எழுதுவாங்க?) so , என்னை நம்பி வாறவங்களுக்கு
பிடிச்ச விஷயங்கள் மட்டுமே இல்லாமல் எனக்கு பிடிச்சதையும் (எழுதிக்)
கிறுக்குவேன்.. உங்க மனசுக்கு என்ன தோணுதோ சொல்லுங்க..!
முதல்ல facebook.. இல்லை இல்லை.. முதல்ல yahoo mail அப்புறம் gmail , facebook ...இப்போ சமீபத்தில் twitter..ன்னு என்னை வளர்த்துக்கிட்டே(!) வந்துருக்கேன்..
அதுனால வலைமனை வ(வா)சிக்குற My Dear மகாஜனங்களே!.. என்னையும் வளர்த்து விடுங்க..
இன்னும் என்ன சொல்ல..?
|
Tweet |
2 comments:
இப்பத்தான் உன் பதிவுகளை வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன் பிரதாஸ்... வாழ்த்துக்களடா... முடிந்தால் "word verification"ஐ தூக்கிவிடு...
நட்புடன்
இவன்
ஆதவன்
உங்கள் வரவே வரமாய்.. :)... நன்றி நண்பா..
Post a Comment