போய்ச்சேர முடியாத தூரத்தில்வேண்டும் உன்னோடுஒரு பேரூந்து பயணம்!
♂.. ♥.. ♀..
மழை தூரலுக்காய்உன்யன்னல் கொஞ்சம்திறந்தைதைபார்த்துவானம் முழக்கமிட்டுநன்றி சொன்னது!
♂.. ♥.. ♀..
எப்போது உன்னைகவனிக்க தொடங்கினேனோஅப்போது இருந்துபேரூந்துவாசக சாலை ஆனது!நான் வாசகனானேன்!
♂.. ♥.. ♀..
நிரம்பி வழிகிற பேரூந்து கூட
வெறுமையாய் தெரிகிறது - எனக்கு
உள்ளே நீயில்லாததால்!♂.. ♥.. ♀..
பேரூந்து நிறுத்தத்தில்கொட்டுகிற மழையில்குடைபிடித்த படியாருக்காகவோ வந்துநின்று விடுகிறாள்
ஒரு தேவதை..!
♂.. ♥.. ♀..
போனதென்னவோ பஸ்ஸு- அதுஎதிர் தெசையில தான்!பார்த்தியே ஒரு பார்வை - யென்னைதிரும்பி!போனேன் நான் -என்
தெசை கெட்டு!
♂.. ♥.. ♀..
விரட்டி பிடிக்க எண்ணிஓடி வந்ததில்..உன் சத்தம் கேட்டு நகறாமல்நின்றது பேருந்து மட்டுமல்ல..
என் இமைகளும் தான்!
♂.. ♥.. ♀..
இவ்வளவு இரைச்சலிலும்இன்னிசையாய் கேட்கிறதுகை நீட்டிசில்லறை வாங்கியஉன் வளையோசை!
♂.. ♥.. ♀..
நான்காவது நிறுத்தத்தில் நான்!ஏழாவது நிறுத்தத்தில் நீ..!மற்றும்எட்டாவது நிறுத்தத்தில்
என் காதல்..!
♂.. ♥.. ♀..
நீ வந்து ஏறும் வரை
தேர் என்று
தெரிந்திருக்கவில்லை!
♂.. ♥.. ♀..
படியில் தொங்கியபடி♂.. ♥.. ♀..
கெஞ்சுகிறது
என் காதல்..
கை பிடித்து இழுத்து
இதயத்தில்
இருக்கை கொடு!
பேரூந்தில் ஏறியவுடன்
சீட் இருக்கிறதா
என்று தேடுபவர்களுக்கு
இடையில்..
நீ இருக்கிறாயா என்று
தேடியதில்
நான் கவிஞனானேன்!
♂.. ♥.. ♀..
|
Tweet |
No comments:
Post a Comment