எதிரினில் அமர்ந்துகொண்டு
ஏதும் பேசாமல் இருக்கையிலும்..
மெல்லத் துளைக்கும் பார்வையின்
வழியே உயிர் வாங்கிப் போகும்
வரம் எப்படி வாய்த்தது உனக்கு..
ஒரு அதிகாலை நேரம்..
உன் கனவில் நான்
வந்து போனதை சொல்லி..
அந்த நாளெல்லாம்
குறுஞ்செய்தியால்
தகவல் அனுப்பி
வெட்கம் குழைத்து
கொண்டிருந்தாய் நீ..
சிரமம் பாராது
ஒரே ஒரு உதவி மட்டும் செய்..
இனி
கொஞ்சம் கனவிலாவது
உன்னை கொஞ்ச விடு!
♂.. ♥.. ♀..
♂.. ♥.. ♀..
அந்த குளக்கரையின்
ஓரமாக அமர்ந்தபடி..
கைகள் கோர்த்து என்
எனை மறந்து
உனை ரசிக்கும்
ஓரமாக அமர்ந்தபடி..
கைகள் கோர்த்து என்
தோளில் சாய்ந்திருக்கையில்..
எனை மறந்து
உனை ரசிக்கும்
கணங்களை மட்டும்..
என்னை நகல் ஆக்கி
அந்த சாலை முனையில்
அந்த சாலை முனையில்
ஒரு ஓரமாய்
நின்றபடி
நின்றபடி
ரசித்திட துடிக்கிறேன்!
♂.. ♥.. ♀..
மற்றொரு நாளில்
உன் வீட்டின் அறையில்
நான் நிற்பதைப்போல
கனாக் கண்டு..
மீதிக்கனவை மறந்து விட்டாய் என
ஏங்கித் தவித்தாயே..
அன்று முதல்
உன் கனவுகளுக்கும் காதலன்
ஆனேன்!..
♂.. ♥.. ♀..
♂.. ♥.. ♀..
வந்து சேர நேரமாகும் நாளில்..
கோணல் முகத்தோடு
எனை வரவேற்கும்
உனக்கு..
ஊடல் ஓய்ந்திட
ஒரு குட்டிக்கவிதை போதும்
உன் கன்னத்தில்..!
♂.. ♥.. ♀..
அம்மாவின்
புடவை கொண்டு நீ
உனை அலங்கரித்த
புடவை கொண்டு நீ
உனை அலங்கரித்த
புகைப்படம்
கண்டதிலிருந்து
அந்த ஐந்து வயது
குறும்புக்காரியை
எப்படியெல்லாம்
காதலிக்கிறேன் என
நான் சொன்னாலும்
புரியாது உனக்கு..
முதல் குழந்தை எனக்கு
பெண்ணாய் பெற்றுக் கொடு!..
♂.. ♥.. ♀..
♂.. ♥.. ♀..
உன்
துப்பட்டாவை கொண்டு
என் தலை துவட்டிய
அன்றில் இருந்து..
உன் சுடிதார் தினங்களில் எல்லாம்
மறக்காமல் ஞாபகமாய்
தவறவிட்டுவிடுகிறேன்
என் குடையை..!
ஆவன செய் மழையே !
துப்பட்டாவை கொண்டு
என் தலை துவட்டிய
அன்றில் இருந்து..
உன் சுடிதார் தினங்களில் எல்லாம்
மறக்காமல் ஞாபகமாய்
தவறவிட்டுவிடுகிறேன்
என் குடையை..!
ஆவன செய் மழையே !
♂.. ♥.. ♀..
எப்போதெல்லாம்
குனித்தபுருவம்
உயர்த்தி ஒரு பார்வை
பார்ப்பாயோ..
அப்போதெல்லாம் -உன்
வெள்ளை பார்வையில்
ஒரு கவிதை தோன்றும்..
மொழியில்லாத
அந்த கவிதையின் -அழகிய
மொழிபெயர்ப்புதான்
என் காதல்!
♂.. ♥.. ♀..
|
Tweet |
No comments:
Post a Comment