Sunday, March 3

சிவந்து விட்டிருந்தது காதல்!

என்னைக்கோ எங்கேயோ எழுதுற சின்ன சின்ன வரிகளை என் ட்விட்டர், முகப்புத்தகம் மற்றும், என் பழைய டயரி அதுவும் இல்லேன்னா கையில கிடைக்குற காகிதக் கிழியல்களுக்குள்ள  தள்ளி விடுறது உண்டு.. அதுல இருந்து சில தொல்லைகள் உங்களுக்காக..




♥♥♥♥♥
எங்கேயோ ஒரு நாளில் 
நாம் மீண்டும் சந்திப்போம்..
 அப்போது உன்னிடம் 
என் உயிர் உடைந்து அழுவேன்.... 
அதுவரையில் இப்படியே தொடரும்
என் காதல்...!

♥♥♥♥♥
"செல்லமாய் நீ என்னை
கடிந்து கொள்ளும் போதெல்லாம்....
உன் காதுமடல் கடித்துவிளையாடும்
காதலனாய் மாறத்தோன்றுகிறது!!"

♥♥♥♥♥
ஒற்றை குடை பிடித்து.. 
நாம் இருவரும் சந்தித்த..
அந்த "முதல்நாள்" போல...
இன்றுவரை...
எந்தவொரு அடைமழையும்
என்னை மொத்தமாய்
நனைக்கவில்லை!

♥♥♥♥♥


என் நினைவு வருமா
உனக்கு என்றேன்..
"மறந்தால் தானே.."
என்கிறாய்.. 
கள்ளி!

♥♥♥♥♥

உன் ஸ்பரிசம் தேடி 
அலைகிறது 
காற்றின் இடைவெளிகளில் 
எந்தன் விரல்கள்!

♥♥♥♥♥

உன் நெற்றி முகட்டில் 
சரிந்து விழும்
ஐந்து அங்குல முடிகள் சில.. 
ஊது குழலாய் 
உன் உதடு குவிய
 அவை ஆரோகண அருவி 
அட!!

♥♥♥♥♥ 

"ச்ச்சீ போடா" என்னும் உன் ஹைக்கூ கவிதைக்காகவே .. 
ஆள் இல்லாத நேரம் பார்த்து, 
உடனே உன் கன்னத்துல ஒரு "இச்"..
 
♥♥♥♥♥
 
நீ என்னை என்னசொல்லி திட்டினாலும்
 எனக்கு உன்னை திட்ட மனம் வராதுடி 
என் குரங்குக்குட்டி..!
 
 ♥♥♥♥♥
 
குறுஞ்செய்தி அனுப்பி.. "கிளம்பிவிட்டேன்" என்கிறாய்..! 
வந்துசேரும் வரை அதுதான் என் வாய்ப்பாடு!
 
 ♥♥♥♥♥
 
சிற்றின்ப கதைகளின் 
ஊற்று 
உன் கண்கள்..!
 
 ♥♥♥♥♥
 
நீ கொஞ்சும் குழந்தைகளில் எல்லாம் 
எனக்கான ராவணன் ஒளிந்திருக்கிறான்!
 
 ♥♥♥♥♥
 
 எந்த நினைவும் 
வந்து தொலைவதில்லை..
உன்னோடு நான் இருக்கையில்...! 
 
 
 ♥♥♥♥♥ 
 
கிள்ளி விட்டு எழுந்து போனாய்
 நீ.. 
சிவந்து விட்டிருந்தது காதல்..
♥♥♥♥♥  

Post Comment

No comments: