என்னைக்கோ எங்கேயோ எழுதுற சின்ன சின்ன வரிகளை என் ட்விட்டர், முகப்புத்தகம் மற்றும், என் பழைய டயரி அதுவும் இல்லேன்னா கையில கிடைக்குற காகிதக் கிழியல்களுக்குள்ள தள்ளி விடுறது உண்டு.. அதுல இருந்து சில தொல்லைகள் உங்களுக்காக..
எங்கேயோ ஒரு நாளில்
நாம் மீண்டும் சந்திப்போம்..
அப்போது உன்னிடம்
என் உயிர் உடைந்து அழுவேன்....
அதுவரையில் இப்படியே
தொடரும்
என் காதல்...!
♥♥♥♥♥
"செல்லமாய் நீ என்னை
கடிந்து கொள்ளும் போதெல்லாம்....
உன் காதுமடல் கடித்துவிளையாடும்
காதலனாய் மாறத்தோன்றுகிறது!!"
கடிந்து கொள்ளும் போதெல்லாம்....
உன் காதுமடல் கடித்துவிளையாடும்
காதலனாய் மாறத்தோன்றுகிறது!!"
♥♥♥♥♥
ஒற்றை குடை பிடித்து..
நாம் இருவரும் சந்தித்த..
அந்த "முதல்நாள்" போல...
இன்றுவரை...
எந்தவொரு அடைமழையும்
என்னை மொத்தமாய்
நனைக்கவில்லை!
நாம் இருவரும் சந்தித்த..
அந்த "முதல்நாள்" போல...
இன்றுவரை...
எந்தவொரு அடைமழையும்
என்னை மொத்தமாய்
நனைக்கவில்லை!
♥♥♥♥♥
என் நினைவு வருமா
உனக்கு என்றேன்..
"மறந்தால் தானே.."
என்கிறாய்..
கள்ளி!
♥♥♥♥♥
உன் ஸ்பரிசம் தேடி
அலைகிறது
காற்றின் இடைவெளிகளில்
எந்தன் விரல்கள்!
♥♥♥♥♥
உன் நெற்றி முகட்டில்
சரிந்து விழும்
ஐந்து அங்குல முடிகள் சில..
ஊது குழலாய்
உன் உதடு குவிய
அவை ஆரோகண அருவி
அட!!
♥♥♥♥♥
"ச்ச்சீ போடா" என்னும் உன் ஹைக்கூ கவிதைக்காகவே ..
ஆள் இல்லாத நேரம் பார்த்து,
உடனே உன் கன்னத்துல ஒரு "இச்"..
♥♥♥♥♥
நீ என்னை என்னசொல்லி திட்டினாலும்
எனக்கு உன்னை திட்ட மனம் வராதுடி
என் குரங்குக்குட்டி..!
♥♥♥♥♥
குறுஞ்செய்தி அனுப்பி.. "கிளம்பிவிட்டேன்" என்கிறாய்..!
வந்துசேரும் வரை அதுதான் என் வாய்ப்பாடு!
♥♥♥♥♥
சிற்றின்ப கதைகளின்
ஊற்று
உன் கண்கள்..!
♥♥♥♥♥
நீ கொஞ்சும் குழந்தைகளில் எல்லாம்
எனக்கான ராவணன் ஒளிந்திருக்கிறான்!
♥♥♥♥♥
எந்த நினைவும்
வந்து தொலைவதில்லை..
உன்னோடு நான் இருக்கையில்...!
♥♥♥♥♥
கிள்ளி விட்டு எழுந்து போனாய்
நீ..
சிவந்து விட்டிருந்தது காதல்..
♥♥♥♥♥
|
Tweet |
No comments:
Post a Comment