Thursday, May 29

இது "நன்றிக்கடன் நேரம்" Powered By:- உணர்ச்சி பொங்கும் இதயம்

டந்தவாரம் வரை, 180+ ஜோடிவிழிகளாய் ரசித்திருந்த, எந்தன் ஆறாவது சக்கரம் fanpage யாரெல்லாமோ (தெரிந்தே) தவறுதலாய் எட்டிப்பார்த்ததில் 200ஐ தாண்டி 275 ஜோடிவிழிகளாய் உயர்ந்து.. வளர்ந்துகொண்டே இருக்கின்றது. 


கடமை, படிப்பு... இரண்டையும் விட வெட்டிவேலைக்கெல்லாம் மத்தியில் என்னை நேசித்த அத்தனை விழிகளையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.
இந்த ப்ளாக் எப்போ ஆரம்பிச்சேன், எந்த சூழலில் ஆரம்பிச்சேன் போன்ற ஏகப்பட்ட தகவல்களை ஏற்கனவே (முன்னைய நன்றிக்கடனில்) போதுமானதையும் தாண்டி அலசிட்டதால அடுத்த கட்டத்துக்கு போகலாம்னு இருக்கேன். 

காதல்.. சினிமா.. இது இரண்டிற்குமான பதிவுகள் தான் என்னிடம் அதிகம். ரஜினியிடம் அரசியல் பற்றி பேசக்கூடாது என்பதுபோல ரஜினி ரசிகனாகிய என்னிடமும் அது இல்லவே இல்லை. நாட்டுநடப்பு பற்றியெல்லாம் நான் பதிஞ்சதே இல்லை. எப்போவாவது மனக்குமுறல் ஏதாச்சும் இருந்தால் கொஞ்சம் கொட்டித் தீர்த்துருப்பேன். அதுவும் என் ஆறுதலுக்காக.  

எழுதியதில் எனக்குபிடித்த விசயங்களை தான் நான் அதிகம் பகிர்ந்திருக்கிறேன்.

சுமாரான எழுத்தையும் பலசமயம் நீங்க பாராட்டின விதத்துல நான் சந்தோசமா எடுத்துக்கிட்டுருந்துருக்கேன். அதெல்லாம் நம்பிக்கை டானிக்!

இந்த 275 லைக்குகளில் 90 பேர் மட்டுமே நான் முகமறிந்த, மனமறிந்த நண்பர்கள்.. ஏனையோர் எங்கெங்கோ வாழும் முகவரி-அறியா நல்லுள்ளங்கள்!

மண்டைக்குள்ள இருக்குற எல்லாத்தையும் எழுதினால் இந்த ப்ளாக் ஒரு விசித்திர ப்ளாக்காக மாறக்கூடிய சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றது. எதிர்காலம் எதை நல்குமோ.. பொறுத்திருப்போம்!

ஊக்கமளித்த அனைத்து மனங்களுக்கும் ஆயுளுக்குமான அன்பு! :)
 

Post Comment

No comments: