Saturday, March 30

உஸ்ஸ்ஸ்ஸு... புஸ்ஸ்ஸ்ஸு..


 

மீதம் வைத்த
கதையொன்றை
சொல்லத்தொடங்கிய
இரவொன்றில்
மறந்துவிட்ட
பெயர்களை
ஞாபகபடுத்திக்
கொண்டிருந்தாய் நீ..!

★★★★★★★★★★★★★★★★★★★★



 
 ம்மாவின் 
பொட்டொன்றை 
நெத்தியில் 
ஒட்டிக்கொண்டு
தோல் பையை
தொங்கவிட்டபடி 
கால் செருப்பின் 
மற்றைய ஜோடியை 
உன் பிஞ்சுக்  
காலுக்குள் வரச்சொல்லி 
வம்புச் சண்டை 
செய்கிறாயே....
உன்னிடம் யார் 
இதையெல்லாம் 
கற்றுத் தந்தது!!!



★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★


"வேணாம்.. ப்பா!
சொன்னா கேளு.. வலிக்கும்..!"
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் 
அம்மாவின் கையில் தொங்கியபடி நீ!
"நீயும் வாயேன்.. ப்பா..!" 
என்று கூப்பிடும் உனக்கு 
எங்கே தெரியப் போகிறது..
.....இன்றைய தேதியில் 
உனக்கு இரண்டாவது 
தடுப்பூசி!

மீண்டும் உன் அம்மாவின்
முகம் பார்த்து கெஞ்சினேன்..
"வேணாம்.. ப்பா!
சொன்னா கேளு.. வலிக்கும்..!"


★★★★★★★★★★★★★★★★★★★★★★★★ 
 
வெறித்தனமாய் 
இடி மின்னலோடு 
விளையாடிக்கொண்டிருந்த அந்திமழை பொழுதொன்றில்..
உந்தன் மடியில்
தலைசாய்த்து 
குழந்தையாய் மாறிபோய் இருந்தன உன் பொம்மைகள்!
 இடியின் சத்தம்
மிரட்டும் போதெல்லாம்..
பொம்மைகளை  
தேற்றிக்கொண்டிருந்தாய்..
"உஸ்ஸ்ஸ்ஸு... 
புஸ்ஸ்ஸ்ஸு.."



★★★★★★★★★★★★★★★★★★★★★★★★


Post Comment

No comments: